Arabic Kadalukku Appaal

ebook

By N. C. Mohandoss

cover image of Arabic Kadalukku Appaal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

எழுத்தாளர் திரு. என். சி மோகன்தாஸ் மனதில் நிற்கும்படியான மென்மையான நாவல்களையும், குடும்ப நாவல்களையும் மணம், குணத்துடன் படைத்துள்ளவர் என்பதை யாராலும் மறுகக முடியாது. அதே போல் தற்போது'அரபிக் கடலுக்கு அப்பால்...' என்ற கண்ணியம் இழை யோடும் ஒரு நாவலை நமக்குத் தந்திருக்கிறார்.துளசி! என்னவொரு அருமையான கதாபாத்திரம்! குவெய்த் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போவதை நினைத்து குதூகலிப்பதும், மாப்பிள்ளை அனுப்பிய புகைப்படம் வந்து சேராததால், 'என் உணர்வுகள் அவர்களுக்குப் புரிகிறதா?' என்று தபால் இலாகாவின் மேல் கோபப்படுவதும், திருமணம் தள்ளிப்போனதும் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயல்வதும், பிறகு குவெய்த் மாப்பிள்ளை வந்து சேர்ந்து திருமணம் முடிந்த பிறகும் மூன்றாம்நாள் அவனைவிட்டுப் பிரிய வேண்டுமே என்று கவலைப்படுவதும், முதலிரவு அறையில் திலீபனுக்காகக் காத்திருந்து... காத்திருந்து... பொறுமையிழந்து,'ஏன் பெரிசுங்களெல்லாம் இப்படி இங்கிதம் தெரியாமல் கழுத்தறுக்கின்றன?' என்று பொருமுவதும்...குவெய்த் புறப்பட்டுச் சென்ற திலீபன் விஸா எடுத்து அனுப்ப, துளசி பாஸ்போர்ட் ரெடிசெய்து கணவன் கூறியபடியே தனியே புறப்பட்டுச் சென்று விமான நிலையத்தில் அவனைக் காணாமல் பரிதவிப்பதும், பிறகு, வீட்டுக்கு வந்த சில நாட்களில் கணவனின் ஒதுக்கலையும், மாற்றத்தையும் மெல்லமெல்ல புரிந்துகொண்ட வள் ஆற்றாமையால்,'கெட்டவன் என்றால் ஏதாவது செய்து தொலைக்க வேண்டியது தானே?' என்று புலம்புவதும், தூக்குப்போட்டுக் கொள்ளும் போது திலீபன் பார்த்துவிட... அந்த ஆத்திரத்தின் உச்சகட்டத்தில், 'வேண்டுமானால் பாருங்கள். எனக்கு செய்யும் துரோகத்திற்கும், நயவஞ்சகத்திற்கும் உங்களை தெய்வம் சும்மா விடாது. அனுபவிப்பீர்கள். கை, கால் வராமல் அவதிப்படுவீர்கள்' என்று இயலாமையால், சாப மிடுவதும்...துளசி குவெய்த் வந்ததிலிருந்தே அவளை பயமுறுத்தும் வெட்டுத் தழும்புக்காரனையே திலீபன் வீட்டிற்கு அழைத்து வரவும், அவர்கள் நம்மை 'ஏதாவது செய்யத்தான் போகிறார்கள்' என்று வீட்டை விட்டு கால்போன போக்கில் குவெய்த் தெருவில் ஓடுவதும், பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலையால் சில செயல்கள் நடந்து, உண்மை வெளிப்படுவதும்... மனதில் நிற்கும் நாவல், நிலைக்கும் நாவல்.ஒரே ஒரு சிறுகுறை மட்டும் மனதில் எழாமல் இருக்கவில்லை. கதாபாத்திரங்களின் உரையாடல்களில் எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் இயற்கையாக அமைந்திருக்கும். பதட்டமான நேரத்தில் கூட," என்ன சொல்கிறாய் நீ?" என்று செந்தமிழில் உரைநடையாகத்தான் கேட்பார்களா? இதெல்லாம் வரலாற்று நாவல்களுக்குத்தான் பொருந்தும்'அரபிக் கடலுக்கு அப்பால்...' போன்ற நாவல்களுக்குப் பயன்படுத்தினால் இது, உரையாடல்களின் வேகத்தைக் குறைக்கிறது.

Arabic Kadalukku Appaal