Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. என்.சி. மோகன்தாஸ் அவர்களின் 'ஜெயிப்போம் வாருங்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூல் மற்றும் அவரது படைப்புகளான 4 நாவல்களின் தொகுப்பு வெளியிடப்படும் நிகழ்ச்சிகளுடன், ஏழை மாணவ - மாணவியர் கல்விக்கு உதவி மற்றும் நற்பணிகளுக்காக ரூ. 2.50 லட்சம் வழங்கப்படும் நிகழ்ச்சியும் இணைந்து திருச்சி மாநகரில் ஒரு சிறந்த விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.தமிழகத்தின் எல்லா பிரபலமான இதழ்களிலும், 'தேவி' இதழிலும் திரு. என்.சி. மோகன்தாஸ் தொடர்கள், சிறுகதைகளை எழுதியவர் என்பதாலும், அவரது நற்பணி உதவிகள் மூலமாகவும் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதை மறுக்க இயலாது.தனது எழுத்துக்கள் மூலம் தமிழக வாசகர்கள் மனதில் இடம் பெற்றுள்ள மோகன்தாஸ், ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டில் தமிழகத்தின் பிரபலமான பிரமுகர்கள், கலைஞர்களை அழைத்து விழா நடத்தி, அதன் மூலம் நிதி சேர்த்து இந்தியாவில் - தமிழகத்தில் பல்வேறு நலப்பணிகளுக்கு உதவிகளாக வழங்கி வரும் தொகை ஆண்டுதோறும் பல லட்சங்கள் ஆகும்.எழுத்துப் பணியுடன் இப்படி மனிதநேயமும் கொண்டவராக திரு. என்.சி.எம். திகழ்வது எழுத்துலகுக்கே பெருமை ஆகும். வெறும் பொழுதுபோக்குக்காக, புகழுக்காக மட்டும் எழுத்தாளராக திகழாமல், அவர் கொண்டுள்ள சமுதாய நோக்கம் பாராட்டுக்கு உரியது.திருச்சியில் நடைபெறும் சீர்மிகுந்த விழாவையொட்டி வெளியிடப்படும் இந்த சிறப்பு மலர், எழுத்துலகில் சிறந்து விளங்கும் இந்த இளைஞர்களின் மனிதநேய உள்ளங்களை மேலும் ஊக்கப்படுத்தும் மலராக அமையும் என நம்புகின்றேன்.அன்புடன்பா. இராமச்சந்திர ஆதித்தன்