Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
"எனது கடிதைகள்" என்ற இந்தப் பாடல்களின் தொகுப்பு 1988-2020 வருட கால கட்டத்தில் எழுதப்பட்டவை. அங்கங்கு அதன் எழுத்தாக்கம் பற்றிய சில விவரங்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
யாரேனும் 'பொழுது போகவில்லையே!' என்று சொன்னால், மூதறிஞர் இராஜாஜி 'நீ சும்மா இருக்கக் கத்துக்கோ! பொழுதெல்லாம் தானே போய்க்கொள்ளும். அதை நீ போக்கவேண்டும் என்பதில்லை' என்று சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கேன். அந்த "சும்மா" இருக்கும் கலை என்பது அவ்வளவு எளிதல்ல என்பதே பலரது அனுபவம். நான் சும்மா இல்லாததும் தவிர, எனது நண்பர்களான பர்வதநாதன், அவரது மனைவி கலைமாமணி மீரா நாதன், மற்றும் எனது தம்பி இசைப் பிரியன் குமார் அவர்களையும் சும்மா இருக்க விடவில்லை. சில கர்நாடக இசைப் பாடல்களை மொழிபெயர்த்து அவர்களை ஸ்வரமும், தாளமும் பொருந்தி இருக்கிறதா என்று சரி பார்க்கச் சொன்னேன். அவர்கள் அதை சும்மா எனக்குச் செய்துகொடுத்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
நம்மில் பலரும் ஏதேனும் ஒரு வேலையைச் செய்துகொண்டுதான் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்போம். ஆனாலும் பெரும்பாலானோருக்கு 'பொழுதுபோக்கு' என்பது பூங்கா போன்ற பொதுவிடங்களில் உலாவிக்கொண்டிருப்பதோ, புத்தகம் படிப்பதோ, அல்லது வேறு மனிதர்களிடம் பேசிக்கொண்டிருப்பதோ என்றுதான் அமைகிறது. ஒருவன் தனிமையை நாடும்போதும், மற்றவர்களின் கருத்துக்களை நாடும்போதும் புத்தகங்களைத் துணையாக வைத்துக்கொள்கிறான். தனிமை விட்டு மற்றவர்களையே நாடும்போது, அவன் அவர்களுடன் உரையாடுகிறான், அல்லது செயலாற்றுகிறான். அந்த அனுபவங்களைத்தான் நீங்கள் இங்கு காண்பீர்கள்.
இத்தொகுப்பில் இருக்கும் பாடல்கள், கவிதை இலக்கணப்படி அமையாது எனக்கு அவ்வப்போது தோன்றியதை எழுத்தில் வடித்து என் உள்ளக்கிடக்கையை இறக்கிவைத்தது போலத்தான் இருக்கும். சில என் வாழ்வில் நேர்ந்த அனுபவங்களை விளக்குவதாகவும், சில மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டதாகவும், மேலும் சில வேறுமொழிப் பாடல்களை மொழியாக்கம் செய்யப்பட்டதாகவும் இருக்கும்.
மொத்தத்தில், இப்படியாகவும் என் பொழுதை நான் போக்கினேன் என்பது நான் சொல்லாமலேயே இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்!